பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள்

  • Dr.Meenal
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள்

ஒரு ஆப்பிள் பழத்தில் உள்ள விட்டமின்-சி அளவை விட, 175 கிராம் எடையுள்ள சிப்ஸில் விட்டமின்-சி சத்து மூன்று மடங்காக உள்ளது.

சிப்ஸில் பி1, பி6, நார்ச்த்து மற்றும் இரும்பு சத்து ஆகியவையும் இடம்பெற்றுள்ளதால் சிப்ஸ் ஆரோக்கியமான உணவே என்று தன் தாயிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் ஓ லெவல் படிக்கும் மாணவி ஒருத்தி. அந்த மாணவியை பாடசாலைக்கு அனுப்பிய பின் தாய், தம்முடைய குடும்ப நல மருத்துவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தம்முடைய பிள்ளை சொன்னது சரியா? என்று கேட்டுக்கொண்டிருந்தாள். இந்நிலையில் தமிழக நகரான திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஹில்லாக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான டொக்டர் மீனாளை சந்தித்து, மகப்பேறு, புற்று நோய், மருத்துவ தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட பல துறை குறித்து வாசகர்களின் பல சந்தேகங்களை முன் வைத்தோம்.

பூப்பெய்தல் தொடங்கி மாதவிடாய் நிறுத்தம் வரை ஏற்படும் மாற்றங்களை மருத்துவ ரீதியாக பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

பெண்களின் உடலியல் ரீதியாக மெனார்க்கே (Menarche) வில் தொடங்கி. மெனோபாஸ் (Menopause)வரை ஏற்படும் மாற்றங்கள் இயற்கை வழங்கியது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யாராலும் மறுக்க இயலாது. மெனோர்கேயையும், மெனோபாசை யும் மருத்துவத்தால் உண்டாக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் இதன் இடைபட்ட காலத்தில் ஏற்படும் உடலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலும்.

இந்த காலகட்டத்தில் தான் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரோன், இன்சுலின், வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் ஆகியவை சுரக்கின்றன. இதற்கு இடைபட்ட காலகட்டத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.

இதன் விளைவாக எலும்புகளின் வளர்ச்சி, மூளையின் வளர்ச்சி, தசைகளின் வளர்ச்சி, இதயத்திற்கான சீரான இரத்த ஓட்டம் ஆகியவை சாத்தியப்படுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது அதாவது மெனோபாஸ் ஏற்படும்போது, இந்த ஹார்மோன்கள் தங்களின் சுரப்பை குறைத்துகொள்வதால் சமச்சீரற்ற தன்மை ஏற்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரித்தல், பிறப்பு உறுப்புகளில் வெள்ளைப்படுதல், இரத்தம் கசிதல், எலும்பு தேய்மானம், இருதய கோளாறு, இரத்த சோகை, புற்று நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பலவித பாதிப்புகள் ஏற்படுகிறது.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகளை எப்படி உணர்ந்துகொள்ளலாம்?

தலைவலி, முகம் சிவத்தல், உடல் வலி, மல சிக்கல், எடை திடிரென்று அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், தூக்கமின்மை, பசியின்மை, மன அழுத்தம், மன நிலையில் பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்போது மாதவிடாய் நிறுத்தத்தை உணர்ந்துகொள்ளலாம். மாதவிடாய் தள்ளிப்போகுதல், ரத்த போக்கு, இரத்த சோகை ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மெனோபாஸ் உறுதிசெய்யப்படுகிறது.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதால் தான் புற்று நோய் வருகிறது என்கிற நம்பிக்கை சரிதானா?

பெரும்பாலான ஆய்வின் ம 09;டிவில் இது ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாதவிடாய் நி றுத்தத்தின் போது, வயதின் காரணத்தினாலும், ஈஸ்ட்ரோஜன் என்கிற சுரப்பியின் ச மச்சீரற்ற தன்மையினாலும் பெண்களுக்கு மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்று நோய் உள்ளிட்ட புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகமாகிறது. இதனை சி ஏ 125 போன்ற நவீன பரிசோதனை மூலமும் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சை கள் மூலம் தீர்வு காணலாம்.

மெனோர்க்கே மற்றும் மெனோபாஸ் ஆகிய இரு நிலைக்களுக்கிடையே நிகழும் முக்கிய நிகழ்வு கருமுட்டை உற்பத்தி. இதனை செ யற்கை உருவாக்க இயலுமா?

இயலாது. ஆனால் கரு முட்டையின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதற்குரிய சிகிச்சை  மூலம் குறைபாட்டை களைந்து, கருவை உற்பத்தி செ ய்தற்குரிய தகுதியான முட்டையாக உருவாக்கலாம்.

நவீன சிகிச்சை முறைகளால் பிரசவம் எந்தவகையில் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது?

ஒருகாலகட்டத்தில் குழந்தை ஏன் பிறக்கவில்லை? என்பது குறித்த சரியான காரணத்தினை இனம் கண்டறியமுடியாத நிலை இருந்தது. இன்று மருத்துவத்தோடு வளர்ந்துள்ள மருத்துவ தொழில்நுட்பம் இந்த குறையை அகற்றியிருக்கிறது. உடலில் என்ன குறைபாடு? என்பதை பலதரப்பட்ட ஸ்கேன் மூலமாக துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதன் மூலம் நோயாளிக்கு நோய் குறித்த அச்சம் முற்றிலுமாக விலக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தனக்கு ஏற்பட்டுள்ள குறை குறித்த மருத்துவ ரீதியான விளக்கங்களையும் நோயாளியால் அறிந்துகொள்ளமுடிகிறது. நவீன சிகிச்சை  முறைகளால் குழந்தையில்லாத தம்பதியினரின் எண்ணிக்கை கணிச மாக குறைக்கப்பட்டிருக்கிறது.

நவீன சிகிச்சை முறைகள் மூலம் நோய்களை கண்டறிந்து தீர்வு கண்டாலும், இதனால் புதிய நோய்களின் வரவை கட்டுப்படுத்த முடியவில்லை என்கிற கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?

நவீன சிகிச்சை  முறைகள் ச ர்வதேச  அளவில் இறப்பு விகிதத்தை குறைத்திருக்கிறது. பிறப்பு ச தவீதத்தை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை ஒப்புகொண்டேயாக வேண்டும். யாராலும் மறுக்க இயலாது. ஒரு காலகட்டத்தில் நோய் என்னவென்று இனங்கண்டறியப்படாமல் நோயாளிகள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால் இன்று நவீன சிகிச்சை கள் மூலம் நோய் கண்டறியப்பட்டு குணப்படுத்தப்படுகிறது. எனவே இவற்றால் புதிய நோய்கள் உருவாகின்றன என்பதை ஏற்க இயலாது. அத்துடன் இதுவரை மருத்துவ ரீதியாகவும் இவை நி ரூபிக்கப்படவில்லை. எனவே இந்த கருத்து தவறானது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சார்ந்த மருத்துவர்கள் கிளினிக்கல் டயாக்னைஸ் மூலமும், மேலைத்தேய நாடுகளைச் சார்ந்த மருத்துவர்கள் லேப் டயாக்னைஸ் மூலம் தீர்வு காண்கிறார்கள். இந்த வேறுபாட்டிற்கு தெற்காசியாவில் செ ல்வாக்குடன் இருக்கும் மாற்று மருத்துவம் ஒரு காரணமா?

மேலைத்தேய மருத்துவர்கள் பெருன்பான்மையோர் தியரிட்டிகல். இந்தியாவை சார்ந்த மருத்துவர்கள் பெருன்பான்மையோர் பிராக்டிகல். மாற்று மருத்துவத்தின் பங்கினையும் ஒதுக்கிட இயலாது.

மெனோபாசிற்கு பிறகு பெண்கள் உள்ளாகும் மனநோய்க்கு உளவியல் ரீதியாக தீர்வு காண்பது நல்ல பலனைத் தருமா? அல்லது மருத்துவத்துடன் கூடிய சிகிச்சை  மூலம் பலன் பெறுவது நலமா?

இதற்கான மருந்துகளும், மாத்திரைகளும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் மெனோபாசிற்கு பிறகு அவர்களுக்குரிய கவுன்சிலிங் வழங்குவதன் மூலமே முழுமையான தீர்வை காண இயலும் என்பதில் திடமான கருத்தினை கொண்டிருக்கிறேன்.

போர் நடைபெற்று வரும் சூழலில் வாழும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் மன அழுத்தம், குழந்தைகளின் பிறப்பை பாதிக்குமா? அதாவது குழந்தைகளின் பிறப்பை தாமதாக்குமா? அல்லது குழந்தைகள் பிறப்பை ஊனமாக்குமா?

போரால் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவது தவிர்க்கமுடியாது. ஆனால் அதனால் உடலியல் சார்ந்த இயக்கங்களில் பாதிப்பு ஏற்படுமா? என்றால் குறைவு தான். அதே தருணத்தில் போரின் போது பயன்படுத்தப்படும் குண்டுகள் மூலம் வேதியல் மாற்றங்களும், கதிர்வீச்சுகளும் கர்ப்பமாக இருக்கும் பெண்களை நிச்சயமாக பாதிக்கும்.

திருமணமாகி, 33 வது வயதில் ஒரு ஊனமான குழந்தையை பெற்றெடுத்த பெண், காலங்கடந்து அதாவது மெனோபாஸ் ஆனபிறகு தன்னால் மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியுமா? என்று உங்களிடம் ஆலோச னை கேட்டால், நீ ங்கள் எம்மாதிரியான பரிந்துரைகளை வழங்குவீர்?

மெனோபாஸ் ஆகிவிட்டது என்றால் ஒன்றும் செ ய்ய இயலாது. ஆனால் அந்த பெண் சற்று முன்கூட்டியே சிந்தித்திருந்தால் அவரது கரு முட்டையை, அதற்குரிய வங்கி மூலம் சே மித்து வைத்திருந்தால் சாத்தியப்பட்டிருக்கும்.

உங்களுடைய மருத்துவ அனுபவத்தில் மறக்க இயலாததை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

சென்னை கீழ்பாக்கம் மருத்துவகல்லூரியில் மகப்பேறு துறையில் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் இரட்டை குழந்தைகளின் தலைகள் ஒன்றோடொன்று இணைந்தே இருந்ததை ஸ்கேன் மூலம் கண்டறிந்து, சிசே ரியன் செ ய்து,  தலை ஒன்றிணைந்த இரட்டை குழந்தைகளை வெளியில் எடுத்தோம். உடனே அந்த குழந்தையின் தலையில் அறுவை சிகிச்சை  செ ய்து தனித்தனியாக பிரித்தெடுத்தோம். அந்த குழந்தைகள் இன்று வரை முழு ஆரோக்கியதுடன் இருக்கிறார்கள். இதனை மருத்துவ உலக அதிச யம் என்றும் சொல்லாம். வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட 45 வயது வயது மதிக்கத்தக்க பெண்ணின் கர்ப்பபையிலிருநது எட்டு கிலோ எடையுள்ள பெரிய கல் ஒன்றினை எம்முடைய தலைமையிலான மருத்துவ குழுவினர் அகற்றினர். இந்த அறுவை சிசிக்சை  ஐந்து மணி நேரம் நடைபெற்றது.